Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் இன்று ஒரே நாளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்று ஒரே நாளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு
, ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (19:18 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கடந்த ஒரு சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 2000கும் குறைவாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது 
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 18,582  பேர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20,089  இன்று குணமாகி உள்ளதாகவும் கொரோனாவால் இன்று 102 பேர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதுவரை கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 18,601 என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 1,78,630 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!