Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கண்காணிப்பில் இருந்தவருக்கு விபத்து: காப்பாற்றிய 40 பேருக்கும் சிகிச்சை!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (13:33 IST)
கேரளாவில் கொரோனா சிகிச்சையில் இருந்த நபர் ஒருவர் தப்பியோடி விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேசமயம் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைகளில் இருந்து தப்பி ஓடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. கேரளாவில் கொல்லம் பகுதியில் கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் இல்லாத நேரம் பார்த்து மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய அந்த நபர் சாலையில் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வர செய்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்துக்குள்ளானவரை பார்க்க வந்த அவரது உறவினர்கள் கூறிய பிறகுதான் அவருக்கு கொரோனா அறிகுறிக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து அவரை காப்பாற்றிய நபர்கள், காவலர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உள்ளிட்ட 40 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு உள்ளான நபருக்கு கொரோனா இருப்பது உறுதியானால் அந்த 40 பேருக்கும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments