Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் மதுவிற்பனை: முதல்வர் அதிரடி திட்டம்

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (09:46 IST)
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மது பழக்கம் அதிகம் உள்ள கேரளாவில் குடிமகன்களின் திண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் மது கிடைக்காத விரக்தியில் பலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒரு சிலருக்கு மட்டும் மதுபானம் வழங்கப்படும் என முதல்வர் நேற்று அறிவித்து இருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுபானங்களை பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு விருப்பமில்லை என்றும் அவ்வாறு பரிந்துரை செய்யப்படும் மருத்துவர்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து கேரள முதலமைச்சர் அதிரடியாக ஆன்லைனில் மதுவகைகள் விற்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும்வரை ஆன்லைனில் தேவைப்படுபவர்கள் மதுபானங்களை வாங்கி கொள்ளலாம் என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் கேரள மாநில தலைமைச்செயலக வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments