Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள வெள்ள நிவாரண நிதியாக ஒரு ஏக்கர் நிலத்தை தந்த சகோதரர்கள்

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (08:30 IST)
கேரளாவில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சகோதரர்கள் தங்களுக்கு சொந்தமாக இருந்த ஒரே சொத்தான ஒரு ஏக்கர் நிலத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்.
 
கேரள மாநிலத்தில் உள்ள வடக்கு கன்னூர் மாவட்டம் பையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சுவாகாவும், அவரது சகோதரரும் இணைந்து கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். இதுகுறிட்து பள்ளி முதல்வர் மூலமாக அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கு சகோதரர்களின் தந்தையும் சம்மதம் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சகோதரர்கள் ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க இருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments