Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறித்தனமாய் துரத்தி வந்த நாய்கள்; நூல் இழையில் தப்பித்த சிறுவர்கள்!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:15 IST)
சமீப காலமாக நாய்கள் கடிப்பதால் மக்கள் பாதிக்கப்படும் செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் நாய்களிடமிருந்து சிறுவர்கள் சிலர் தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த சில காலமாக நாய்கள் மக்களை கடிக்கும் சம்பவங்களும், தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் வட மாநிலங்களில் சில பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்கல் லிப்டில் செல்பவர்களை கடித்த வீடியோக்கள் வைரலாகியது.

கேரளாவில் 12 வயது சிறுமி ஒருவர் பால் பாக்கெட் வாங்க கடைக்கு சென்றபோது தெரு நாய்கள் கடித்ததில் அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதை தொடர்ந்து பல பகுதிகளில் தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் மக்களை நாய்கள் தாக்கு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: மின் கட்டணத்தை அடுத்து சேவைக்கட்டணமும் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

இந்நிலையில் தற்போது கேரளா மாநிலம் கன்னூரில் சிறுவர்களை நாய்கள் துரத்தும் வீடியோ வைரலாகியுள்ளது. நேற்று குடியிருப்புகள் அதிகம் இல்லாத அப்பகுதியில் சுற்றி திரிந்த 7க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அப்பகுதி சிறுவர்கள் இருவரை துரத்தி வந்தன.

வேகமாக ஓடிவந்த அவர்கள் ஒரு வீட்டிற்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுபெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments