Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக, கேரள மாநிலங்களில் பொது போக்குவரத்து துவங்க முடிவு!

Webdunia
திங்கள், 18 மே 2020 (15:11 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் பொது போக்குவரத்தை துவங்க திட்டம். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் பொது போக்குவரத்தை துவங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா இது குறித்து கூறியதாவது, 
 
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். மாவட்டத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும். கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் பொதுபோக்குவரத்து சேவை. அனைத்து கடைகளும் திறக்கப்படும், ஞாயிற்றுகிழமை மற்றும் பொதுமுடக்கம் கர்நாடகா முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
இதேபோல போக்குவரத்து குறித்து கேரள போக்குவரத்து அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு. கொரோனா அதிகம் இல்லாத பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை. மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை. மாவட்டம், மாநிலத்தை விட்டு பேருந்து செல்ல தடை தொடரும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments