Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று ஒரேநாளில் 38,607 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் சுகாதாரத்துறை

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:47 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக சுனாமி போல் கட்டுக்கடங்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தினமும் இருபதாயிரம் முப்பதாயிரம் என கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 38 ஆயிரத்து 607 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது 
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 48 பேர் பலியாகி உள்ளதாகவும் இதனை அடுத்து கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5259 என்றும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
தமிழகம் போலவே கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால் தான் கொரோனா  வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரள மாநிலம் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் விடுமுறையா? இதோ முழு விவரங்கள்..!

முக்கிய நகரங்களில் மீண்டும் ஏர்டெல் சேவை முடக்கம்; வாடிக்கையாளர்கள் அவதி

அடுத்த கட்டுரையில்
Show comments