Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கத்வா சிறுமி கற்பழித்து கொலை; 3 பேருக்கு ஆயுள்: நீதிமன்றம் அதிரடி!!

கத்வா சிறுமி கற்பழித்து கொலை; 3 பேருக்கு ஆயுள்: நீதிமன்றம் அதிரடி!!
, திங்கள், 10 ஜூன் 2019 (17:07 IST)
கத்வா சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட் 6 பேரில் மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
கத்வா பகுதியில் 8 வயதான சிறுமியை கதுவா காட்டுப் பகுதியில் இருந்து கடத்திச் சென்ற கொடூரர்கள், கோவில் ஒன்றில் 4 நாட்களாக மறைத்து வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை பஞ்சாப் பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சஞ்சி ராம், ஆனந்த் தத்தா, பர்வேஷ்குமார், தீபக் கஜூரியா, சுரேந்தர் வர்மா, திலக் ராஜ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.  
webdunia
இதனை தொடர்ந்து இப்போது தண்டனை விவரம் வெளியாகியுள்ளது, அதன்படி கத்வாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேரில் சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், மீதமுள்ள மூவரான திலக் ராஜ், உதவி காவல் ஆய்வாளர் ஆனந்த் தத்தா, சுரேந்தர் வர்மா ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மைனர் சிறுவன் விஷால் என்பவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை!