Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவையில் நிறைவேற்றப்பட்டது – காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (19:18 IST)
கடும் வாக்குவாதங்கள், எதிர்ப்புகளை தாண்டி காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்த்துகளை நீக்குதல், காஷ்மீரையும், லடாக்கையும் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றுதல் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளடங்கிய மசோதா தற்போது மக்களவையில் வெற்றிக்கரமாக நிறைவேற்றப்பட்டது.

மக்களவை உறுப்பினர்களிடையே மிண்ணனு வாக்குப்பதிவு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காஷ்மீரிக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின.

அதற்கு பிறகு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கான வாக்கு சேகரிப்பு தொடங்கியது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 361 வாக்குகளும், எதிராக 66 வாக்குகளும் கிடைத்தன. ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்ததால் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments