Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் பனிப்பொழிவு; சாலையை மூடிய பனி! – ராணுவ வாகனத்தில் பிறந்த குழந்தை!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:57 IST)
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ராணுவ வாகனத்திலேயே குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடுமையான குளிர்காலம் நிலவி வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள நரிகூட் பகுதியில் வாழ்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி கண்டுள்ளது. அந்த பகுதிக்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது என்பதால் அப்பகுதியை சேர்ந்த சுகாதார பணியாளர் சாதியா பேகம் இந்திய ராணுவத்தின் கலரூஸ் கம்பெனி படை பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நரிகூட் விரைந்த ராணுவம் பெண்ணை ராணுவ வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை விரைந்துள்ளது. ஆனால் அதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு வலி அதிகமாகவே வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்த சொல்லி சாதியா பேகமே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். கடும் பனி பொழிவு உள்ளிட்ட இடர்பாடுகளுக்கு நடுவே அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ராணுவ வாகனத்தில் பெண் குழந்தை பிறந்த சம்பவம் வைரலாகியுள்ளது. உரிய நேரத்தில் உதவிக்கு வந்த ராணுவத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments