Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவுக்கு பலி!

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவுக்கு பலி!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (19:21 IST)
கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 789 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 1,050  என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 13,306 என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த என்ணிக்கை 29,71,833 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,706 என்றும், கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 29,20,792 அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநில சுகாதாரத்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது என்பதும் தமிழகத்தை விட அம்மாநிலத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் மீண்டும் 1200ஐ தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு!