பொதுமக்களுக்கு மதுபானம் விருந்து வைத்த பாஜக எம்பி.. கர்நாடகாவில் பரபரப்பு..!

Siva
திங்கள், 8 ஜூலை 2024 (14:39 IST)
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பி ஒருவர் பொதுமக்களுக்கு மதுபான விருந்து வைத்ததாக கூறப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தனித்து பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் கூட்டணி கட்சியுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது என்பதும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றார் என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு நேரடியாக சென்று நன்றி தெரிவிக்கும் கூட்டம் மட்டுமே நடத்தி வரும் நிலையில் கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி. சார்பில் பொதுமக்களுக்கு மதுபானம் விருந்து வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகாவில் உள்ள சிக்பல்லாபூர் தொகுதியில் வென்ற பாஜக எம்.பி. சுதாகர் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மது வழங்குவதை அறிந்து பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், அதன்பின் மிகப்பெரிய மைதானத்தில் போலீஸ் பாதுகாப்போடு, மக்களை வரிசையில் நிற்க வைத்து மது விநியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments