Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ambulance
, புதன், 9 நவம்பர் 2022 (11:34 IST)
அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என கர்நாடக மாநில ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
 
இந்த விசாரணையின் போது ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்றும் வாகன போக்குவரத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
சாலை போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர் 
 
மேலும் இதுகுறித்து அரசு சார்பில் பதில் தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து உயர் நீதிமன்றம் அந்த அவகாசத்தை அளித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்விட்டரை வாங்க டெஸ்லாவுக்கு ஆப்பு வைத்த மஸ்க்? – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!