Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஷ்டத்துக்கு விலை சொன்ன ஓலா.. ஊபர்..! தடை விதித்த மாநில அரசு!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (10:52 IST)
ஆன்லைன் டாக்சி சேவை செயலிகளான ஓலா, ஊபர் உள்ளிட்டவை அதிகமான தொகை வசூலித்ததாக எழுந்த புகாரில் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் ஆன்லைன் டாக்சி, ஆட்டோ சேவை செயலிகளான ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில காலமாக இந்த ஆன்லைன் செயலிகள் மூலம் புக் செய்யப்படும் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அதிகமான தொகை வாடகையாக வசூலிக்கப்படுவதாக தொடர் புகார்கள் இருந்து வருகிறது.

ALSO READ: இரண்டாவது நாளாக விபத்துக்குள்ளான ‘வந்தே பாரத்’ ரயில்!

கர்நாடகாவில் ஆன்லைன் டாக்சி நிறுவனங்கள் கிலோ மீட்டருக்கு எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நிர்ணய விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளது.

இதையடுத்து கர்நாடகாவில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட சேவைகளுக்கு போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. மூன்று நாட்களுக்கு கட்டண நிர்ணயம் குறித்த உரிய விளக்கம் அளிக்கவும், மாநில அரசின் கட்டண விதிமுறைகளுக்கு பொருந்தும் கட்டணத்தை நிர்ணயிக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments