Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம்: கர்நாடகா அரசு மேல்முறையீடு மனு தாக்கல்..!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (18:03 IST)
தமிழகத்திற்கு 3000 கனஅடி நீரை திறந்து விட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
 
தமிழகத்திற்கு 3000 கனஅடி நீரை திறந்து விட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் மேகதாது அணை விவகாரம் குறித்து முடிவு எடுக்கவும் மனுவில் கர்நாடகா அரசு கோரிக்கை வைத்துள்ளது.
 
அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீர் பற்றாக்குறை இருப்பதாலும், போராட்டங்கள் நடப்பதாலும் உத்தரவை நிறைவேற்ற முடியாத சூழலில் உள்ளதாக கர்நாடக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments