Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விற்பனை செய்து ரூ.40 லட்சம் கார் வாங்கிய விவசாயி.. மணப்பெண்ணை தேடுவதாக பேட்டி..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (07:33 IST)
தக்காளி விற்பனை செய்து கடந்த சில மாதங்களில் கிடைத்த லாபத்தில் 40 லட்ச ரூபாய் கார் வாங்கி உள்ள விவசாயி ஒருவர் தனக்கேற்ற மணப்பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார். 
 
கடந்த சில மாதங்களாக தக்காளி விலை உச்சத்தில் சென்ற நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி பயிரிட்ட விவசாயிகள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில்  கர்நாடக சேர்ந்த விவசாயி ராஜேஷ் என்பவர் தக்காளி விற்பனை செய்ததன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து உள்ளார். அதில் அவர் ரூ. 40 லட்சம் மதிப்பில் சொகுசுக் கார் ஒன்றை வாங்கி உள்ளார். மேலும் தனக்கான மணப் பெண்ணையும் அவர் தேடி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 
 
இன்னும் சில மாதங்களுக்கு தக்காளி விலை இதே உயர்வில் இருந்தால் ஒரு கோடி வரை சம்பாதித்து விடுவேன் என்றும் அவர் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

நம்மள நிம்மதியா வாழ விடமாட்டாங்க! – விரக்தியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!

ஐடி ரெய்டு என தொழிலதிபர்களை ஏமாற்றிய டிரைவர்.. குறி வைத்து பிடித்த போலீசார்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட -டிட்டோஜாக்!

14 வயது சிறுமியுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்த இளைஞர்! – சிறுமியின் தந்தை செய்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments