Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகம் எங்கள் சகோதர மாநிலம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி..!

TK Sivakumar
, செவ்வாய், 4 ஜூலை 2023 (16:03 IST)
தமிழகம் எங்கள் சகோதர மாநிலம் என்றும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வோம் என்றும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 
 
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே மேகதூது அணை விவகாரம் மற்றும் காவிரியில் நீர் திறந்து விடுவது குறித்த விவகாரம் உச்ச கட்டத்தில் உள்ளது. 
 
காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என தமிழக அரசு காவிரி மேலாண்மைக்கு கடிதம் எழுதி உள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டது. அதேபோல் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா கூறி இருக்கும் நிலையில் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என தமிழகம் கூறிவருகிறது. 
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தமிழகம் எங்கள் சகோதர மாநிலம் என்றும் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது என்றும் தெரிவித்தார். மேலும் இரு மாநிலப் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாட்ரிக் சாதனை படைக்கப் போகிறது பாஜக: வானதி சீனிவாசன்..!