Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு விண்ணப்பம்.. என்ன செய்ய போகிறது தமிழக அரசு?

Mahendran
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (14:29 IST)
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பம் அளித்துள்ளது .

மேலும் இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும், மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் கர்நாடக அரசின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சிகள் எடுத்து வருகிறது என்பதும் தமிழ்நாடு அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

காவிரியில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு உறுதி கொண்டு உள்ள நிலையில் தற்போது மத்திய அரசிடம் விண்ணப்பித்து மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி தமிழக அரசிடம் மேகதாது அணை கட்ட ஒப்புதல் தேவையில்லை என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதை அடுத்து தமிழக அரசு இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி காவிரியில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் திமுக.. யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயில் சேவை! கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

ஒரே நாடு ஒரே தேர்தல்: தீவிரம் காட்டும் மத்திய அரசு..!

UPI செயலியில் பண பரிவர்த்தனை: இன்று முதல் புதிய வசதி அறிமுகம்..!

சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியா நாட்டில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments