’கராச்சி’ எனும் பெயரே இருக்கக்கூடாது... பெங்களூரில் பரபரப்பு...

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (18:51 IST)
பெங்களூரில் உள்ள  ஒரு பிரசித்தி பெற்ற பேக்கரியின் பெயர் கராய்ச்சி ஆகும். இப்பெயரே இங்கு இருக்கக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் நாளில் காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஆயுதப் போராளிகள் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது.
 
இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாகிஸ்தான் ஆதரவு இருந்துள்ளது  என்று அனைவரும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
 
ஆனால் இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் மறுத்தார். இந்நிலையில் உலக நாடுகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தது.
 
இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டின் அடையாளத்துடன் இயங்கிவரும் பல்வேறு தொழில் நிறுவனக்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் பெங்களூரில் உள்ள கராச்சி பேக்கரி என்ற கடையில் இருக்கும் காராச்சி என்பதை நீக்கக்கோரி சிலர் ஆக்ரோசமாக நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடையின் பெயர் பலகை அகற்றப்பட்டதாக தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments