Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆரம்பிக்கும் 2 ஜி வழக்கு – ஆ ராசா, கனிமொழிக்கு நோட்டிஸ் !

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (14:31 IST)
2 ஜி வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் ஆ ராசா மற்றும் கனிமொழிக்கு நோட்டிஸ் அனுப்பவுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஊழல் என ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பேசப்பட்ட 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார்.   இந்த தீர்ப்பை எதிர்த்து  அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளன. ஒருவருடமாக இவ்வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது.

இந்த வழக்கின் விசாரனை இன்று நீதிபதி ஏ.கே.சாவ்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  ஆனால் சிபிஐ தரப்போ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.

இதை ஏற்ற நீதிபதி வழக்கின் விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் வழக்கு சம்மந்தமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments