Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே சதாப்தத்தில் மாநில எல்லை கடந்து வெற்றி: கெஜ்ரிவாலுக்கு கமல் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (12:46 IST)
பஞ்சாப் வெற்றிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. 5 மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் மீதமுள்ள மாநிலங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் கிடைத்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடினர். அங்கு முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான், முதலமைச்சர் பதவி ஏற்பு விழா ராஜ்பவனில் நடைபெறாது என்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் தான் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் கூறினார். 
 
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிட வேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே சதாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாக காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments