Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

Advertiesment
Kamal Haasan

Mahendran

, வெள்ளி, 30 மே 2025 (14:57 IST)
உலக நாயகன் கமல்ஹாசன்  கன்னடம் மொழி தமிழில் இருந்து பிறந்தது என்ற  கருத்துக்கு மன்னிப்பு கோர மறுத்தார். மேலும் தவறு செய்தால் கண்டிப்பாக மன்னிப்பு கேட்பேன், ஆனால் தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்,.
 
"நான் முன்பும் அச்சுறுத்தப்பட்டுள்ளேன்... ஆனால் அன்பே வெல்லும். கர்நாடகா, ஆந்தர பிரதேசம், மற்றும் கேரளா ஆகியோருக்கு எனக்கு உண்மையான அன்பு இருக்கிறது. வேறு ஏதேனும் எண்ணத்தோடு உள்ளவர்கள் தான் தவறாக சந்தேகிப்பார்கள்," என்று அவர் கூறினார்.
 
கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்பார்த்தபடி கடுமையான எதிர்வினைகள் வந்தன. கர்நாடகாவின் பிரதான எதிர்ப்புக் கட்சியான பாஜக மற்றும் தமிழ்நாட்டில் அதற்கு கூட்டணி அமைந்துள்ள அதிமுக கட்சியும் கமலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
 
 "நான் சொன்னது அன்பால் மட்டுமே கூறப்பட்டது, பல வரலாற்றாசிரியர்கள் எனக்கு மொழி வரலாறை கற்றுத்தந்துள்ளனர். நான் ஏதேனும் தவறாகப் பொருள் கூறவில்லை," என்று ஏற்கனவே அவர் தெரிவித்தார்.
 
"மொழி பற்றி பேச அரசியல்வாதிகள் தகுதி இல்லை, நான் உட்பட," எனவும் கமல்ஹாசன் கூறியிருந்தார்.
 
கன்னட ஆதரவு குழுக்கள், ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படும் கமல்ஹாசனின் புதிய படத்திற்கு தடை விதிக்குமாறு கோரிக்கை எழுப்பியுள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!