Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் காந்திக்கு தண்டனை கொடுத்த நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு..!

ராகுல் காந்திக்கு தண்டனை கொடுத்த நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு..!
, வெள்ளி, 12 மே 2023 (11:53 IST)
ராகுல் காந்திக்கு தண்டனை கொடுத்த நீதிபதிக்கு சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்த நிலையில் அந்த பதவி உயர்வு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டது. இந்த தண்டனையை கொடுத்த நீதிபதிக்கு சமீபத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. அந்த நீதிபதி பழைய பதவியில் தொடர வேண்டும் என்றும்  சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 
அவர் மட்டும் இன்றி 68 நீதிபதிகளின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது: 87.33% மாணவ, மாணவிகள் தேர்ச்சி..!