வழக்கு விசாரணையில் ChatGPT செயலியை பயன்படுத்திய நீதிபதி..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (17:52 IST)
ChatGPT என்ற செயலி தற்போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி வருகிறது என்பதும் அனைத்து துறைகளிலும் இந்த செயலியை பயன்படுத்தும் முறை தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக வேலைகள் மிகவும் சுலபமாக முடிகிறது என்றாலும் பலர் வேலை இழந்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ChatGPT வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. 
இந்த நிலையில் ஜாமீன் வழக்கின் மீது முடிவெடுக்க ChatGPT செயலியை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி அனுப் சிட்காரா என்பவர் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இதுகுறித்து அந்த நீதிபதி விளக்கம் அளித்த போது ChatGPT செயலியை பயன்படுத்தினாலும் வழக்கின் தன்மை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில்தான் இந்த வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் ChatGPTயை நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் இன்னும் சில வருடங்களில் முழுக்க முழுக்க ChatGPTயை நீதிமன்றங்கள் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments