நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நீதிபதி...

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (16:30 IST)
Judge who fainted in court

2012 ஆம் ஆண்டு, டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயா வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணையின்போது,  உச்ச நீதிமன்றத்தில் அறைக்குள் பெண் நீதிபதி ஆர். பானுமதி மயங்கி விழுந்தார்.
 
நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 பேரும் தனித்தனியாக சட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்து வந்த பெண் நீதிபதி இன்று அறையில் மயங்கி விழுந்தார். அவருக்கு பிற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற ஊழியர்களும் மயக்கம் தெளிய உதவினர்.
 
அதன்பின், வீல் சேர் கொண்டு வரப்பட்டு நீதிபதியை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காலையில் நீதிபதி மயங்கி விழுந்ததால் மாலைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

கல்வி துறைக்கு படித்த அமைச்சர் வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாற வாய்ப்பு உண்டா?

அடுத்த கட்டுரையில்