Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமரை 'கை'யில் கசங்கும்: காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (19:39 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் புதிய தெம்புடன் உள்ளனர். ராகுல்காந்தியின் தலைமையின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டதாகவே அவர்கள் கருதி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகரான ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் 'வடக்கே தாமரை கருகும் வாசனை தெற்கு வரைக்கும் அடிக்கிறது. இன்னும் ஓராண்டில் மத்தியில், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானாவில் தாமரை 'கை'யில் கசங்கி கிடக்கப் போகிறது. இதில் தமிழகத்தில் தாமரை மலர்ந்துட்டாலும்..என்று பதிவு செய்துள்ளார்.

ஜோதிமணியின் இந்த பதிவுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் காமராஜருக்கு பின் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாமல், திமுகவின் முதுகில் சவாரி செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மக்களவை உறுப்பினர் கூட இல்லை என்றும், தமிழகத்தில் 'தாமரை' எப்படி மலராதோ அதேபோல் 'கை'யும் நிமிராது என்று பலர் பதிலடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments