Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகள் மூலம் இந்தியாவில் நுழைய ஜான்சன் அண்டு ஜான்சன் கடும் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (09:22 IST)
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. 

 
இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை இந்தியாவில் 12.38 கோடி வேக்ஸின் டோஸ் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தான் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன தயாரிப்பு தடுப்பூசிகளை இந்தியாவிலும் பயன்படுத்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அனுமதி கோரி வருகிறது. 
 
இதனிடையே தற்போது இந்தியாவில் தடுப்பூசிகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன தயாரிப்பு தடுப்பூசிகளுக்கு விரைவில் ஒப்புதல்  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments