Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய சோறு சாப்புடுங்கள்! கொரோனா வராது!!..

Arun Prasath
செவ்வாய், 10 மார்ச் 2020 (19:22 IST)
பழைய சோறு சாப்பிட்டால் கொரோனா வராது என புதுவை எம்எல்ஏ ஜான் குமார் பேசியுள்ளார்.

சீனாவை தொடர்ந்து 100 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் உலகளவில் இதுவரை 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் ஒரு விழாவில் கலந்துக் கொண்ட எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசுகையில், “கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நிறைய வழிகள் இருக்கிறது. கொடுக்காபுளி அல்லது காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனா வராது” என கூறியுள்ளார்.

மேலும் அவர் “பழைய சோறும், பழவகைகளும் தினமும் சாப்பிட்டால் கொரோனா மட்டுமல்ல, மரணம் கூட வராது, காலையில் அரை மணி நேரம், மாலையில் அரை மணி நேரம் வெயிலில் நிற்கவேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments