Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசலை போலவே மெல்ல மெல்ல ஏறும் சிலிண்டர்

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (22:47 IST)
பெட்ரோல், டீசலின் விலை கடந்த நான்கு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வரும் மத்திய அரசு, அதே நடைமுறையை சிலிண்டர்  விஷயத்திலும் செய்து வருகிறது.



 
 
ஏற்கனவே கடந்த 10 மாதங்களில் சிலிண்டரின் விலை மாதம் ஒன்றுக்கு ரூ.2 எனரூ.20 அதிகரித்துள்ள நிலையில் தற்போது இன்று முதல் மேலும் ரூ.1.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமின்றி வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர்  சமையல் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படும் எனவும், இதனால் விலை மாதத்திற்கு 4 ரூபாய் அதிகரிக்கும் எனவும் ஏற்கனவே அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் சமையல் சிலிண்டர் போலவே ஜெட் எரிவாயுவிற்கான விலை கிலோ லிட்டருக்கு 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கிலோ லிட்டருக்கு 50,020க்கு விற்கப்பட்ட ஜெட் எரிவாயு இனி ரூ.53,045க்கு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments