Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள் ? – ஜெகன் மோகனின் புதிய திட்டம் !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (08:37 IST)
ஆந்திர மாநிலத்திற்குப் புதிதாக நான்கு தலைநகரங்களை அறிவிக்கும் திட்டத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி சாதிவாரியாக ஐந்து துணை முதலமைச்சர்களை நியமித்தார். அது இந்தியா முழுவதும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. இதையடுத்துத் தலைநகர் விஷயத்திலும் அவர் இதேப் போல ஒருத் திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஹைதராபாத் தெலங்கானாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. அதனால் ஆந்திராவின் தலைநகராக அமராவதி நிர்ணயிக்கப்படும் என அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். 33,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அமராவதி நகர் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் அந்த திட்டத்தைக் கைவிட்டுவிட்டு புதிதாக நான்கு தலைநகர்களை அமைக்க தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை ஆந்திர மாநில பாஜக எம்.பி டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments