Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு … முதல்வர் அறிவிப்பு!

நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு … முதல்வர் அறிவிப்பு!
, புதன், 21 அக்டோபர் 2020 (11:11 IST)
ஆந்திராவில் நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. இருப்பினும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி முதல் ஆந்திராவில் பள்ளிகளை அரைநாள் மட்டும் திறக்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஒற்றைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் (1,3,5,7,9,11), இரட்டை படை எண்கள் கொண்ட வகுப்புகள் (2,4,6,8,10,12) ஒரு நாளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சௌதி இளவரசர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுத்த துருக்கி பெண்