Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வரும் அமேசான் நிறுவனர்: மோடியை சந்திப்பாரா?

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (11:47 IST)
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெஸோஸ் இந்தியா வரும் நிலையில் பிரதமரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறு, குறி தொழில்களை தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சி ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. தொழில் வல்லுனர்கள் மற்றும் பலதுறை நிபுணர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் அமேசான் உரிமையாளர் ஜெப் பெஸோஸ் பங்கேற்க உள்ளார்.

சமீப காலத்தில் இந்தியாவின் மிகப்பெரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமாக அமேசான் வளர்ந்துள்ளது. பல சிறு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை அமேசான் மூலம் தேசிய அளவில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாக கூறப்படும் நிலையில், அமேசான் போன்ற நிறுவனங்களால்தான் சிறு, குறு தொழில்கள் நசிந்து விட்டதாகவும் புகார்கள் உள்ளன. இந்நிலையில் ஜெப் பெசோஸ் இந்தியா வருவது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வரும் ஜெப் பெஸோஸ் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments