Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியை திடீரென ராஜினாமா செய்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.. என்ன காரணம்?

Siva
செவ்வாய், 5 மார்ச் 2024 (07:28 IST)
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரிடம் வழங்கி உள்ளதாகவும் அதை அவரும் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
 ராஜ்ய சபா தேர்தலில் குஜராத் மாநிலத்திலிருந்து போட்டியின்றி ஜேபி நட்டா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜேபி நட்டா பதவி காலம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் வரை இருக்கும் நிலையில் தாமாகவே அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்திருப்பதால் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

பகவத் கீதையை கையால் எழுதி சாதனை.. மனைவியுடன் பாஜக நிர்வாகி செய்த சாதனை..!

போக்குவரத்து போலீஸ்' பெயரில் SMS வருகிறதா? புதுவகை சைபர் மோசடி.. உஷாராக இருக்க காவல்துறை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments