Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு எல்லை பகுதியில் ஒரு இன்ச் கூட விடாமல் சீல் வைக்கப்படும்: டிஜிபி அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 28 ஜூலை 2024 (18:04 IST)
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை பகுதிகள் முழுவதும் ஒரு இன்ச் கூட விடாமல் சீல் வைக்கப்படும் என ஜம்மு டிஜிபி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நேற்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவும்போது நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்பதும் நான்கு வீரர்கள் காயமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் ஜம்மு பகுதியில் ஊடுருவ முயற்சித்து வரும் நிலையில் சர்வதேச எல்லை பகுதிகள் முழுவதும் ஒரு இன்ச் இடம் கூட விடாமல் சீல் வைக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல் துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் உள்ளூர் இளைஞர்கள் குழு அமைக்கப்பட்டு ராணுவத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

ஜம்முவில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்து வருகிறார்கள் என்றும் எனவே பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம்.! தலையிட கோரி பிரதமர் - ஜனாதிபதிக்கு மருத்துவர்கள் கடிதம்..!!

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்..! ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி நாளை பரப்புரை..!!

சிறைகளால் என்னை பலவீனப்படுத்த முடியாது.! தேச விரோத சக்திகளுக்கு எதிராக போராடுவோம்.! கெஜ்ரிவால்...

மக்கள் பிரச்சனைகளில் எந்த வித ஈடுபாடும் விஜய்க்கு இல்லை.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு..!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ஒருநாள் மட்டும் ரத்து.. எந்த நாள்? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments