Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் கனவு! – கைகோர்த்த பிரான்ஸ்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:36 IST)
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் தற்போது பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையம் இணைந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் வல்லரசு நாடுகளுக்கு இணையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து வீரர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022ம் ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த இந்தியா முனைந்து வரும் நிலையில் 2018ல் தொடங்கப்பட்ட பணி கொரொனா காரணமாக காலதாமதமாகியுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், தேவையான உபகரணங்கள் வழங்கவும் பிரான்சின் சி.என்.இ.எஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் பின்னாட்களில் இந்தியாவில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தை அமைக்கவும் சி.என்.இ.எஸ் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments