Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரயான் போனா என்ன? நாம சந்திரனுக்கே போகலாம்!: இஸ்ரோ சிவன் அதிரடி!

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:50 IST)
நிலவுக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட சந்திரயான் திட்டத்தில் லேண்டர் செயலிழந்ததால் துயரத்தில் உள்ள மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் இஸ்ரோ சிவன்.

நிலவின் தென் துருவ பகுதிகளை ஆராய்வதற்காக சந்திரயான் 2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது. வெற்றிகரமாக நிலவுக்கு சென்ற சந்திரயான் விண்கலம் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியபோது சிக்னலை இழந்தது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா, இஸ்ரோவுடன் இணைந்து விக்ரம் லேண்ட்ரை கண்டுபிடிக்க முயன்றது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

இந்நிலையில் குஜராத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன் “ விக்ரம் லேண்டர் சிக்னலை இழந்தது குறித்து ஆராய குழு அமைத்துள்ளோம். அவர்களது ஆய்வு முடிவுகளை வைத்து விக்ரம் லேண்டரில் என்ன குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். ஆய்வு குழுவின் அறிக்கைக்கு பிறகு நிலவின் அடுத்த பயணம் குறித்து பணிகள் தொடங்கப்பட்டும். 2022ல் விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்தில் தீவிரமாக இயங்கி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments