Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயலால் ராக்கெட் ஏவும் நேரம் மாற்றமா? இஸ்ரோ தகவல்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (09:32 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 14 அல்லது 15ஆம் தேதி சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகள் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய்ம் முதலில் கூறியது. ஆனால் தற்போது சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 14ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு  ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு அதன் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கஜா புயல் காரணமாக ராக்கெட் ஏவப்படாது என்று செய்திகள் வெளிவந்தது.

ஆனால் இந்த தகவலை இஸ்ரோ மறுத்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜிஎஸ்எல்வி மாக் 3 வரும் 14ம் தேதி மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்றும், இந்த ராக்கெட் புயல் காரணமாக ஏவப்படாது என செய்தியில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

3,423 கிலோ எடை கொண்ட மாக்-3 ராக்கெட் தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ எடுத்துச்செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலை முன்னிட்டே உலக ஐயப்ப சங்கமம் மாநாடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

சனாதனம் குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்

டிரம்ப்பின் ஈகோ, இந்தியாவுடனான உறவை அழிக்க அனுமதிக்க கூடாது: அமெரிக்க எம்பி எச்சரிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு

பல்லடத்தில் மர்மமான முறையில் இறந்த தெரு நாய்கள்: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments