திடீரென கட்சி மாறிய ராஜபக்சே: அதிர்ச்சியில் அதிபர் சிறிசேனா

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (08:55 IST)
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துவிட்டு தன்னுடைய கட்சியில் புதியதாக சேர்ந்த மஹிந்தா ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா சில நாட்களுக்கு முன் நியமனம் செய்தார். ஆனால் ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் திடீரென பாராளுமன்றத்தை கலைத்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்சேவும் அவருடைய மகன் நமல் ராஜபக்சேவும் விலகி இலங்கை பொதுஜன முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா) கட்சியில் இணைந்தனர். இவர்கள் இருவருடன் மேலும் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் 50 பேர் இந்த கட்சியில் இணைந்துள்ளனர்.

வரும் ஜனவரியில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவே ராஜபக்சே இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments