Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் ஏவ தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Siva
திங்கள், 27 ஜனவரி 2025 (08:28 IST)
ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் தயார் நிலையில் இருப்பதாகவும், வரும் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரோவின் 100வது செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-15  என்ற ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 29ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் காலை 6:23 மணிக்கு ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்தும் என்றும், இது ஒரு பெரிய சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்டவுன், நாளை காலை 5:23 மணிக்கு தொடங்குகிறது என்றும், தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் இருப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments