Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் ஏவ தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Siva
திங்கள், 27 ஜனவரி 2025 (08:28 IST)
ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் தயார் நிலையில் இருப்பதாகவும், வரும் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரோவின் 100வது செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-15  என்ற ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 29ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் காலை 6:23 மணிக்கு ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்தும் என்றும், இது ஒரு பெரிய சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்டவுன், நாளை காலை 5:23 மணிக்கு தொடங்குகிறது என்றும், தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் இருப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments