Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடும் அமைச்சர் அமித்ஷா... கூடுதல் பாதுகாப்பு..!

Siva
திங்கள், 27 ஜனவரி 2025 (07:46 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட இருப்பதை அடுத்து, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

இந்த ஆண்டு மகா கும்பமேளா என்பதால், 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 11 கோடிக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகருக்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர இருப்பதாகவும், அவர் திரிவேணி சங்கத்தில் புனித நீராட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து, அவர் பூரி சங்கராச்சாரியார் மற்றும் துவாரகா சங்கராச்சாரியார் ஆகியோர்களை சந்தித்து ஆசி பெறுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர் திரிவேணி சங்கத்தில் புனித நீராட உள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச மாநில அரசு செய்துள்ளது.

 Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments