Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லிஃப்ட் தருவதாக கூறி வெளிநாட்டு பெண் கூட்டு பலாத்காரம்

Advertiesment
லிஃப்ட் தருவதாக கூறி வெளிநாட்டு பெண் கூட்டு பலாத்காரம்
, திங்கள், 25 ஜூலை 2016 (10:19 IST)
இமாச்சல பிரதேச மாநிலத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவருக்கு லிஃப்ட் தருவதாக கூறி அவரை காரில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மனாலி அருகே நள்ளிரவு 3 மணியளவில் அருகில் உள்ள ஸ்பிட்டி வேலி பகுதிக்கு செல்ல டாக்ஸியை தேடிக்கொண்டு இருந்தார் அந்த வெளிநாட்டு பெண். அப்போது அந்த பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த கார் அவருக்கு லிஃப்ட் தருவதாக கூறி அழைத்துள்ளனர்.
 
அந்த காரில் 6 பேர் இருந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காலை 10 மணி அளவில் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
மனாலி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் 3 வெளிநாட்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூக வலைதளத்தில் கேலி செய்து கொள்ளும் பிரதமரும் முதல்வரும்