Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவரக்காரர்களுக்கு மாநில அரசே துணை நிற்கிறதா? பாஜக கேள்வி

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (13:30 IST)
நேற்று மேற்கு வங்கத்தில் உள்ள துர்க்கை கோவில் கலகக் காரர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் பாஜக தலைமையிலான  ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், எதிர்க்கட்சி  தலைவர்கள்  உள்ளிட்ட பலரும்  போராடி வருகின்றனர்.
 
இப்போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  மத்திய அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
 
தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரும் 23 ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில்  துர்க்கை கோவில் கலகக் காரர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது :
 
மேற்கு வங்கத்தில் இருக்கும் துர்க்கை கோவில் நேற்று கலவரக்காரர்களால் சேதப் படுத்தப்பட்டது. கலவரக்காரர்களுக்கு மாநில அரசே துணை நிற்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments