Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைதாகிறாரா டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..! டெல்லியில் உச்சகட்ட பதற்றம்..!!

arvind kejriwal
, வியாழன், 4 ஜனவரி 2024 (10:24 IST)
மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. கெஜ்ரிவால் வீட்டிற்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.
 
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநிலத்தின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
ALSO READ: பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம்?..! ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு...!!
இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நேற்றோடு 3-வது முறையாக சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

webdunia
இந்த நிலையில்தான் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அதன்பின் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவரது வீடு இருக்கும் பாதை மூடப்பட்டு அங்கு வசிப்பவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
இதனால் ஆதிஷி கூறியதுபோல் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் மூலம் போதை மாத்திரை.. கொரியர் மூலம் டெலிவரி.. பிடிபட்ட வாலிபர்கள்..!