IRCTC இணையதளம் மீண்டும் முடங்கியது.. ஒரே மாதத்தில் 3வது முறை.. பயணிகள் அவதி

Mahendran
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (13:51 IST)
இந்த மாதத்தில் மட்டும் ஐஆர்சிடிசி இணையதளம் இரண்டு முறை முடங்கிய நிலையில் இன்று மூன்றாவது முறையும் முடங்கி இருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டை ஒட்டி வெளியூர் செல்வதற்காக பலர் இன்று காலை 10 மணிக்கு தட்கல் முறையில் முன்பதிவு செய்ய முயன்ற போது ஐ ஆர் சி டி சி இணையதளம் மற்றும் மொபைல் செயலி ஆகிய இரண்டுமே முடங்கியதாக தெரிகிறது.

இதனால் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு சிரமத்திற்கு உள்ளாகிதாகவும் பல பயணிகள் இணையதளத்தில் உள்ளே நுழைய முடியவில்லை என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் உள்ளே நுழைந்தவர்கள் கூட டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்ற போது தான் முடக்கம் ஏற்பட்டதாகவும் இது குறித்து பல பயனர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்த வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments