Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'புதிய கட்சி' - லட்சியத்தோடு தொடங்கிய இரும்பு பெண்!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (18:47 IST)
மணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுபவர் இரோம் சர்மிளா. இவர், மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.


 


 

மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, இவர் கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார்.

மேலும், பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக இரோம் ஷர்மிளா கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார். பின்னர் இம்பால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீனில் விடுதலையான இரோம் ஷர்மிளா, அரசியலில் இணைந்து மணிப்பூர் முதல் அமைச்சராக விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து அவரை முற்றிலுமாக இம்பால் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியது.  இதுகுறித்து இரோம் ஷர்மிளா கூறியதாவது, ”அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யவே புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளேன்." என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இன்று பள்ளிகள் விடுமுறை எங்கே?

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments