Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு.. பதவியை தூக்கி எறிந்த ஐபிஎஸ் அதிகாரி

Arun Prasath
வியாழன், 12 டிசம்பர் 2019 (14:02 IST)
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மஹாராஷ்டிராவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அப்தூர் ரகுமான் தனது ஐஜிபி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில். ”குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன். நாளை முதல் நான் அலுவலகத்திற்கு செல்லப்போவதில்லை. மேலும் நான் எனது பணியை ராஜினாமா செய்யப்போகிறேன்” என பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவரது மற்றொடு டிவிட்டில், “குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மதநல்லிணக்கத்துக்கு எதிரானது. இது மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிறது. மேலும் இந்த மசோதா இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான முஸ்லீம்களை அச்சுறுத்துகிறது” எனவும் அப்தூர் ரகுமான் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"புதிய கீதை" வழியில் தீய சக்திகளை எதிர்த்து நிற்கும் விஜய்.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழிசை..!

12 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய துரை வைகோ..!

மதுரையில் இன்று முருகர் மாநாடு.. சிறப்பு அழைப்பாளராக பவன் கல்யாண்.. கூடுதல் பாதுகாப்பு..!

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments