Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாதத்தை தாண்டி போகும் ஊரடங்கு? விமான சேவை ரத்து!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (17:19 IST)
ஜூலை 15 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு. 
 
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க அரசு துரிதமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 
 
இந்நிலையில், தற்போது, இந்தியா முழுவதும் நகரங்களில் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்ற மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
 
மேலும், இந்தியா முழுவதும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் ஆகியவற்றின் சேவைகளும் வரும் ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி வரை ரத்து என அறிவிக்கப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது இந்தியாவில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என விமான போக்குவரத்து அமைச்சகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments