Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளை குறிவைத்த சர்வதேச போதைப்பொருள் கும்பல் கைது!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (07:37 IST)
தற்போது உள்ள மாணவ, மாணவியர் சிலர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஒழுக்கமாக இருந்தாலும் ஒருசில மாணவர்கள் இவ்வாறு பாதை தவறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது

இந்த நிலையில் மதுபோதை மட்டுமின்றி போதைப்பொருட்களையும் மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளை போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் குறிவைத்துள்ளதாகவும், குறிப்பாக மாணவிகளை போதைப்பழக்கத்திற்கு அடிமையாக்க இந்த கும்பல் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அப்படிப்பட்ட சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை நெல்லூர் போலீஸ் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

போதை பொருள் கடத்தல் கும்பலை, வாகன சோதனையின் போது தற்செயலாக பிடித்த நெல்லூர் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தபோதுதான் அவர்கள் சர்வதேச கடத்தல் கும்பல் என தெரிய வந்ததகவும், கைது செய்யப்பட்ட கும்பலில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்றும், அவர்களிடம் இருந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நெல்லூர் போலீசார் தெரிவித்துள்ள்னர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments