Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளை குறிவைத்த சர்வதேச போதைப்பொருள் கும்பல் கைது!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (07:37 IST)
தற்போது உள்ள மாணவ, மாணவியர் சிலர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஒழுக்கமாக இருந்தாலும் ஒருசில மாணவர்கள் இவ்வாறு பாதை தவறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது

இந்த நிலையில் மதுபோதை மட்டுமின்றி போதைப்பொருட்களையும் மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளை போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் குறிவைத்துள்ளதாகவும், குறிப்பாக மாணவிகளை போதைப்பழக்கத்திற்கு அடிமையாக்க இந்த கும்பல் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அப்படிப்பட்ட சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை நெல்லூர் போலீஸ் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

போதை பொருள் கடத்தல் கும்பலை, வாகன சோதனையின் போது தற்செயலாக பிடித்த நெல்லூர் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தபோதுதான் அவர்கள் சர்வதேச கடத்தல் கும்பல் என தெரிய வந்ததகவும், கைது செய்யப்பட்ட கும்பலில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்றும், அவர்களிடம் இருந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நெல்லூர் போலீசார் தெரிவித்துள்ள்னர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments