Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தாக்குதல்? ஒட்டு கேட்ட உளவுத்துறை: பாக். சதித்திட்டம் முறியடிக்கப்படுமா?

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (16:04 IST)
காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு கடந்த வாரம் வியாழக்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 
 
இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதால் இந்தியா பாகிஸ்தனை தனிமைப்படுத்தவும், அந்நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தவும் காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியா மீது மீண்டும் இம்மாதிரியான தாக்குதல் நடக்கவிருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 
 
அதாவது, மூன்று தற்கொலைப்படை தீவிராதிகள் உள்பட 21 தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளதாக தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் பயங்கரவாத அமைப்பின் தளபதி ரியாஸ் வெளியிட்ட ஆடியோ ஒன்றில், புல்வாமா தாக்குதல் போலவே வருங்காலத்தில் தாக்குதல்கள் நடத்தப்படும். 
 
பிணங்களை புதைக்க சவப்பெட்டிகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் அமைப்பில் 15 வயது சிறுவன் கூட தற்கொலை படை தாக்குதலுக்கு தயாராக இருக்கிறான் என இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இப்படிப்பட்ட வெளிப்படையான மிரட்டலும், உளவுத்துறையின் எச்சரிக்கையும் வந்துள்ளதால் இந்தியா தரப்பில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிகப்படும் என தெரிகிறது. அதோடு, புல்வாமா தாக்குதலுக்கே பாகிஸ்தானை பழிதீர்க்க வேண்டும் என காத்திருப்பதால், நிச்சயம் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments