Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

Mahendran
திங்கள், 17 ஜூன் 2024 (15:22 IST)
இன்ஸ்டாகிராம்  நண்பர் கொடுத்த குளிர்பானத்தை இளம் பெண் குடித்த நிலையில் அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்த நிலையில் அந்த இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஒருவரிடம்  தனக்கு வேலை வாங்கி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தான் வங்கியில் வேலை பார்ப்பதால் வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறிய அந்த நபர் தன்னை நேரில் பார்க்க வருமாறு அழைத்துள்ளார். 
 
இந்த நிலையில் அவர் சொன்ன இடத்திற்கு இளம் பெண் சென்ற நிலையில் அவரை வரவேற்ற அந்த நண்பர் குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருப்பதை அறியாத அந்த இளம் பெண் குளிர்பானத்தை குடித்த நிலையில் மயக்கமாக அதன் பிறகு அந்த இன்ஸ்டா நண்பர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார். 
 
மயக்கம் தெளிந்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள இன்ஸ்டாகிராம் நண்பர் மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்